மின்னஞ்சல்

pollachiknithyandhan@gmail.com

உதவி & ஆதரவு

+91 96555 90123

,aw;ifAld; ,ize;j tho;f;if> kf;fSld; ,ize;j gazk;
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, மக்களுடன் இணைந்த பயணம்

பொள்ளாச்சி K. நித்தியானந்தன்

Pollachi K.Nithyanandhan
என் வாழ்க்கை, என் சேவை, மக்களுக்காக

nghs;shr;rpapd; tsu;r;rpNa vd; tho;f;ifapd; Nehf;fk;
பொள்ளாச்சியின் வளர்ச்சியே என் வாழ்க்கையின் நோக்கம்

Pollachi K.Nithyanandhan

பொள்ளாச்சியில் விவசாய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த நான், சமூக வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறேன்.

தொழில், விவசாயம், மருத்துவ உதவி, கல்வி உதவி, பெண்கள் வளர்ச்சிக்கான வழிகாட்டுதல் மற்றும் மக்கள் நல சேவையின் மூலம் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளேன்.

நாம் எல்லோரும் சேர்ந்து வளர வேண்டும் என்பதே என் இலக்கு.

உங்கள் குடும்பத்தில் ஒருவராக

உங்கள் வளர்ச்சிக்காக ஒருவன்

குடும்பம்

பொள்ளாச்சியில் பாரம்பரியமிக்க விவசாய குடும்பத்தில் திரு B. கிருஷ்ணசாமி கவுண்டர், K. கார்த்திகேயனி ஆகியோரது முதல் மகனாக பிறந்தவர். உடன் பிறந்தோர் சகோதரி K. கௌரி, சகோதரர் K. உமாசங்கர், மனைவி N. வனிதா மற்றும் மகள் V.N. சிவானி ஆகியோர் உடன் கூட்டுக்குடும்ப முறைக்கு இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.

பொள்ளாச்சியில் 1920-களில் கௌரவ நீதிபதியாக இருந்த திரு மு.கிருஷ்ணசாமி கவுண்டர் அவர்களின் வழித்தோன்றல். தனது பாட்டனார் மு.கிருஷ்ணசாமி கவுண்டர் அவர்களின் ஆட்டுக்கிடா மில் நிறுவனத்தில் துவங்கிய வியாபாரம் தனது தாத்தா திரு M.K.பாலசுப்பிரமணியக் கவுண்டர் (நடராஜ் கவுண்டர்) அவர்களாலும், பின் தனது தகப்பனார் திரு பி. கிருஷ்ணசாமி கவுண்டர் அவர்களாலும் நிர்வாகிக்கப்பட்டு பொள்ளாச்சிப் பகுதி வியாபாரிகள் கொண்டு வரும் விவசாய விலை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் இடமாக இருந்து பல விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நின்ற குடும்பத்தை சேர்ந்தவர்.

img
என் பயணம்

kf;fSf;fhd gazk;

fy;tp jhd; kdpjid cUthf;Fk; Kjy; mbj;jsk; கல்வி தான் மனிதனை உருவாக்கும் முதல் அடித்தளம்

Kalvi

பள்ளிக் கல்வியை பொள்ளாச்சியில் உள்ள ஆரோக்கிய மாதா பள்ளியில் தொடங்கி, விஸ்வதீப்தி பள்ளி மற்றும் சமத்தூர் ராம ஐய்யங்கார் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பயின்றேன்.

தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் கொண்ட நான், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு டிப்ளமோ (DME) படிப்பை முடித்தேன்.

அதனை தொடர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மீது ஆர்வம் கொண்டு, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு B.E (Mechanical Engineering) பட்டம் பெற்றேன்.

கல்வி எனக்கு ஒரு பட்டம் மட்டும் அல்ல, சிந்தனை, திட்டமிடல் மற்றும் செயல்பாட்டில் தெளிவை அளித்த ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக இருந்தது.

Kalvi

njhopy; tsu;r;rp vd;gJ jdp Kd;Ndw;wk; my;y> r%f Kd;Ndw;wk; தொழில் வளர்ச்சி என்பது தனி முன்னேற்றம் அல்ல, சமூக முன்னேற்றம்

Thozhil

என் முன்னோர்கள் செய்து வந்த விவசாயத்தையும், குடும்ப நிறுவனமான ஆட்டுக்கிடா மில் தொழிலையும் தொடர்ந்த நான், வெளிநாட்டு வாய்ப்புகளைத் துறந்து சொந்த ஊரிலேயே தொழில் வளர்ச்சியை உருவாக்க முடிவு செய்தேன்.

பருத்தி அரவை, நிலக்கடலை உரித்தல், வாகன உதிரி பாகங்கள் விற்பனை, சுற்றுலா நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்களை உருவாக்கி நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளேன்.

மேலும் TATA அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம், Mahindra First Choice சேவை மையம் போன்றவற்றின் மூலம் உள்ளூர் தொழில்துறையை வலுப்படுத்தியுள்ளேன்.

பொள்ளாச்சி அக்ரி பிசினஸ் கம்பெனி (PABCO) மூலம், விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியில் முன்னிலை வகித்தேன்.

தற்போது ஸ்ரீ தேவ்கிருஷ் குழுமத்தின் மூலம்:

  • Keetru Farm Stay
  • Devkrish Bharat Gas
  • Uutru Drinking Water
  • Devtha Sports Arena
  • Ekcavashini Training Center
  • Nayam Oil Production

Thozhil
போன்ற பல நிறுவனங்களை நிர்வகித்து, பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறேன்.
நான் வளர வேண்டும் என்பதல்ல என் நோக்கம், என்னுடன் பலர் வளர வேண்டும் என்பதே என் எண்ணம்

murpay; vd;gJ gjtp my;y> kf;fs; ey Nritf;F xU nghWg;G அரசியல் என்பது பதவி அல்ல, மக்கள் நல சேவைக்கு ஒரு பொறுப்பு

Arasiyal

பொள்ளாச்சி மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் பயணத்தை தொடங்கிய நான், இரண்டு முறை தேர்தல் களத்தில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டேன்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றேன்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பெற்றேன்.

எனினும், வெற்றி அல்லது தோல்வி என எந்த முடிவும் என் செயல்பாட்டை மாற்றவில்லை.

இன்று நான் ஒரு அரசியல் நபராக மட்டும் அல்ல, பொள்ளாச்சி மக்களின் நலனுக்காக எப்போதும் அணுகக்கூடிய ஒரு சேவகராக செயல்பட்டு வருகிறேன்.

Arasiyal

kf;fSf;Fr; nra;Ak; NritNa ,iwtDf;Fr; nra;Ak; Nrit மக்களுக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவை

Sevai

"மக்களுக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவை" என்ற உயரிய கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒரு முன்னேற்றமான சமூகத்தை உருவாக்கவும் கல்வி, மருத்துவம், விவசாயம் மற்றும் மகளிர் மேம்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

விவசாயம்

நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப் பாதுகாப்பதையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும் பொள்ளாச்சி கே. நித்தியானந்தன் அவர்கள் தனது முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளார்.

Sevai

ரசாயன உரங்களற்ற இயற்கை விவசாய முறைகளை ஊக்கப்படுத்துதல், மண்ணின் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதோடு, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றிடத் தேவையான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்.

மருத்துவம்

ஆரோக்கியமான சமூகம் அமைவதே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்ற நோக்கில், கிராமப்புற மக்களுக்காகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். தகுதி வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள், இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகிறோம். அவசர காலங்களில் உயிர்காக்கத் தேவையான இரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்து, பொதுமக்களிடையே அடிப்படை முதலுதவி பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.

கல்வி உதவி தொகை

பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு மாணவரின் கல்வி கனவும் கலைந்துவிடக் கூடாது என்பதில் கே. நித்தியானந்தன் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இதற்காக, அரசு பள்ளிகளில் பயின்று திறமை இருந்தும் மேற்கல்வி பயில வசதியற்ற ஏழை மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறோம். மேலும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களை ஆண்டுதோறும் வழங்கி, அவர்களின் கல்விப் பயணம் தடையின்றி தொடர உறுதுணையாக இருக்கிறோம்.

பெண்கள் வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்

பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தற்சார்பு அடையத் தேவையான வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். தையல் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் சிறுதொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி வருகிறோம். மேலும், பெண்களுக்கான சட்ட ரீதியான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தி, அவர்கள் தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் இயங்க ஆதரவு அளிக்கிறோம்.

பொள்ளாச்சி மக்கள் நலச் சங்கம்

பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நலனுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பாகும். சாதி, மத மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களையும் நலிவடைந்த பிரிவினரையும் கைதூக்கி விடுவதே எங்களின் லட்சியம்.

பொள்ளாச்சி கே. நித்தியானந்தன் அவர்களின் சீரிய தலைமையின்கீழ், தன்னார்வலர்களுடன் இணைந்து மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

img

0+

ஆண்டுகள் அனுபவம்

0+

பல்துறை தொழில்கள்

0+

உருவாக்கிய வேலைவாய்ப்புகள்

0+

விவசாயிகள் முன்னேற்றம்

ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கான எங்கள் முயற்சி

nghs;shr;rp kf;fs; eyr; rq;fk; பொள்ளாச்சி மக்கள் நலச் சங்கம்

Pollachi Makkal Nala Sangam

நமது பகுதியினருக்கு தேவையான வசதி, படிப்பு, திறமை, ஆளுமை அனைத்தும் இருந்தும் நாம் எட்டி இருக்க வேண்டிய உயரத்தை அடையாததற்கு காரணம் முறையான வழிகாட்டுதல் இல்லாததும், தொழில் செய்வதற்கான சூழ்நிலையையும் அதற்கான மனநிலையை உருவாக்கிக் கொள்ளாததுமேயாகும்.

ஜாதி, மதம், மொழி அரசியல் என பிரிந்திருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து பொள்ளாச்சியின் வளர்ச்சிக்காகவும், பொள்ளாச்சி மக்கள் நல்வாழ்வுக்காகவும் துணை நிற்கும் ஓர் அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தோடு பொள்ளாச்சி மக்கள் நலச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இருந்து மக்கள் பணி செய்து கொண்டிருப்பவர்.

விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள், சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் உண்டியல் வழங்கும் திட்டம், கிராமப்புறப் பெண்களுக்கான தையல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் நமது பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பணி செய்து கொண்டிருப்பவர்.

நமது முன்னோர் ஏற்படுத்தி வைத்த தமிழ் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், பாரம்பரிய கலைகள் ஆகியவை வெறும் மூடநம்பிக்கையோ, பொழுதுபோக்கோ மட்டும் அல்ல; அவை நம்மை நெறிமுறைப்படுத்தி நல்வாழ்வு வாழ வைக்கும் வழிமுறைகளே என்பதை உணர்த்த வேல்பூஜை, விளக்குப் பூஜை, வள்ளிக்கும்மி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நமது பகுதி மக்கள், குறிப்பாக பெண்கள் வாழ்வில் உடல் ஆரோக்கியத்தோடும் மன அமைதியையும், சந்தோஷத்தையும் அடைந்திடவும்,

உடல் நலத்தையும், மன வளத்தையும் பாதுகாக்கும் வாழ்வியல் பயிற்சி, தவம் மற்றும் யோகா பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தவர்.

எங்கள் சேவைகள்

r%f gzpfs; kw;Wk; nghJ epfo;r;rpfs;
சமூக பணிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள்

எனது பயணம்

kf;fspd; tsu;r;rpNa vd; ,yf;F
மக்களின் வளர்ச்சியே என் இலக்கு

உங்கள் குறைகளை தெரியப்படுத்த

vq;fis njhlu;G nfhs;Sq;fs;
மக்களின் வளர்ச்சியே என் இலக்கு

முகவரி

Sri MKK Enclave, Marapettai Street, Udumai Road,
Pollachi - 642001

உதவி & ஆதரவு

+91 96555 90123

மின்னஞ்சல்

pollachiknithyandhan@gmail.com